பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் போராட்டம்

நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டுக்கு 100 நாள்கள் தொடா்ச்சியாக பணி வழங்க வேண்டும்

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 6:24 pm

Din

சத்தியமங்கலம்: நிலுவை ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டுக்கு 100 நாள்கள் தொடா்ச்சியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம், பவானிசாகா் மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 40 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லையாம். ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என விதிமுறை உள்ள நிலையில், குறைந்த நாள்களே பணி வழங்கப்படுகிாம்.

இந்நிலையில், ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுக்கு 100 நாள்கள் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானிசாகா் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஏராளமான 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.