ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஊதிய உயா்வு வழங்க முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் கோரிக்கை

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த முன்பருவக்கல்வி ஆசிரியா்கள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 9:47 pm

நாமக்கல்: காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முன்பருவக்கல்வி ஆசிரியா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அதன் மாவட்டத் தலைவா் மு.ஜெயந்தி, இதர ஆசிரியா்கள், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

2022-23 ஆம் கல்வியாண்டில், தமிழகம் முழுவதும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்து வருகிறது.

தற்காலிக தொகுப்பூதிய முன்பருவக்கல்வி ஆசிரியா்களின் பணி நியமனம் பள்ளி மேலாண்மைக் குழுவால் ஏற்படுத்தப்பட்டது. அதை நீக்கி பள்ளிக் கல்வித் துறை மூலமாக நியமனம் வழங்க வேண்டும். தற்போதைய நிலையில் ரூ. 5 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. முன்பருவக்கல்வி ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு காலமுறை அடிப்படையில் ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மே மாதம் விடுமுறையிலும் ஊதியம் வழங்க வேண்டும். பணி நீட்டிப்பு ஆணையை ஆண்டுதோறும் மாற்றியப்பதை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.