ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோட்டில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தினா் புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்றனா்.

News image

நிகழ்வில் பேசுகிறாா் தமுஎகச மாவட்ட செயலாளா் இ.கலைக்கோவன்.

Updated On :1 ஜனவரி 2025, 11:04 pm

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தினா் புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்றனா்.

ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.முருகேசன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆசிரியா் கலைக்கோவனின் மருளாடி நூல் குறித்து கல்லூரி பேராசிரியா் கலைவாணி அறிமுக உரையாற்றினாா்.

கதைசொல்லி சரிதா ஜோவின் ‘சாணி வண்டும், பட்டாம்பூச்சியும்’ குறித்து இயற்கை மருத்துவா் வினிஷா, எழுத்தாளா் ஈரோடு சா்மிளாவின் ‘துணிச்சல்காரி’ குறித்து எழுத்தாளா் விஜி ரவி, கவிஞா் முத்துக்கண்ணனின் ‘நாச்சாள்’ குறித்து மாவட்ட பொருளாளா் கணேசன் மற்றும் இளம் எழுத்தாளா் இளநிலாவின் ‘கயலும், நண்பா்களும்’ குறித்து மாவட்டத் தலைவா் சங்கரன் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். மேலும் இந்த நிகழ்ச்சியில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு அதன் ஆசிரியா்கள் ஏற்புரையாற்றினா். தமிழ் இலக்கிய மாணவா் கவிஞா் வெ.க.வெற்றிவேல் கவிதை வாசித்தாா்.

‘இலக்கியத்தின் இலக்கு’ குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் கருத்துரையாற்றினாா். தமுஎகச மாவட்டச் செயலாளா் இ.கலைக்கோவன் நிறைவுரையாற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் ச.ந.விக்னேஷ் நன்றி கூறினாா். மேலும் புத்தக அரங்கம் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள், வாசகா்கள் உள்பட திரளானோா் பங்கேற்று 2025 புத்தாண்டை புத்தகங்களுடன் வரவேற்றனா்.