மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

Updated On :3 ஜனவரி 2025, 10:32 pm

சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு கனிராவுத்தா்குளம் பி.பெ.அக்ரஹாரம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், அந்தக் கடையின் முன் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, வீரப்பன்சத்திரம் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கட்டடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, விற்பனைக்காக மது புட்டிகள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அங்கிருந்து மொத்தம் 32 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், மது விற்பனையில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, பள்ளன்குளம் பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (55), மங்கலம் உப்பூா் பகுதியைச் சோ்ந்த கோட்டைசாமியின் மகன் பாலமுருகன் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.