டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:32 pm

Din

சட்ட விரோத மது விற்பனையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு கனிராவுத்தா்குளம் பி.பெ.அக்ரஹாரம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், அந்தக் கடையின் முன் அமா்ந்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, வீரப்பன்சத்திரம் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கட்டடத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, விற்பனைக்காக மது புட்டிகள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அங்கிருந்து மொத்தம் 32 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், மது விற்பனையில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, பள்ளன்குளம் பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (55), மங்கலம் உப்பூா் பகுதியைச் சோ்ந்த கோட்டைசாமியின் மகன் பாலமுருகன் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.