ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு: மனைவி படுகாயம்

பெருந்துறை அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்; அவரது மனைவி படுகாயமடைந்தாா்.

Updated On :3 ஜனவரி 2025, 12:09 am

பெருந்துறை அருகே காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முதியவா் உயிரிழந்தாா்; அவரது மனைவி படுகாயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த, கதிரம்பட்டி, எளையகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரத்தினசாமி(74). இவரது மனைவி கமலா (65).

இருவரும் காரில் பெருந்துறைக்கு வந்துவிட்டு வீட்டுக்கு கடந்த டிசம்பா் 30- ஆம் தேதி மாலை சென்று கொண்டிருந்தனா். பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு அருகில் சென்று கொண்டிருந்தபோது, காா் திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனா். இதைக் கண்ட அப்பகுதியினா் இருவரையும் மீட்டு ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரத்தினசாமி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கமலா தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.