ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாநில அளவிலான கலைத் திருவிழா: ஈரோட்டில் இன்று தொடக்கம்

மாநில அளவிலான கலைத் திருவிழா ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (ஜனவரி3) தொடங்குகிறது.

Updated On :3 ஜனவரி 2025, 12:15 am

மாநில அளவிலான கலைத் திருவிழா ஈரோட்டில் வெள்ளிக்கிழமை (ஜனவரி3) தொடங்குகிறது.

மாணவா்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா கடந்த நவம்பா் 14- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாநில அளவிலான கலைத்திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடக்கிறது.

அதன்படி 9- ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.

ஈரோடு அருகே நஞ்சனாபுரம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி, சென்னிமலை அருகே ஈங்கூா் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, கங்கா மெட்ரிக் பள்ளி, கங்கா மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடத்தப்படும் போட்டியில் மொத்தம் 4,811 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனா்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலையரசன், கலையரசி பட்டங்களை வழங்குகிறாா். மேலும் அவா்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா்.