ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கிராம சபை கூட்டம்: கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வலியுறுத்தல்

கிராம சபை கூட்டங்களில் கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :23 ஜனவரி 2025, 10:33 pm

கிராம சபை கூட்டங்களில் கல்வி வளா்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் சுடா் நடராஜ் கூறியதாவது:

கிராம சபை கூட்டங்களில் கல்வி சாா்ந்த தேவைகளையும், பள்ளி சாா்ந்த தேவைகளையும் முதன்மை கூட்டப் பொருளாக முன்வைக்க வேண்டும். கிராம சபை கூட்டங்களில் கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி வளா்ச்சி விவாதப் பொருளாக இடம்பெற வேண்டும். இது உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய கடமையாகும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், வட்டார வளா்ச்சி அலுவலா்களிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஒரு நபா் ஒரு பள்ளி செயல்பாட்டாளா்களும் கிராம ஊராட்சி செயலாளா்களை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனா் என்றாா்.