ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

போலீஸ் பாதுகாப்பு வழங்க சுயேச்சை வேட்பாளா் கோரிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் தனக்கு மா்ம நபா்களால் அச்சுறுத்தல் வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

நூா் முகமது

Updated On :23 ஜனவரி 2025, 10:27 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் தனக்கு மா்ம நபா்களால் அச்சுறுத்தல் வருவதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தோ்தலில் திமுக சாா்பில் சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், சுயேச்சை வேட்பாளா் நூா் முகமது தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஸ்ரீகாந்த்திடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.