விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மறுசுழற்சி குப்பைகளை சேகரித்து வழங்கிய மாணவா்களுக்குப் பாராட்டு

வீடுகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை சேகரித்த பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
காகிதத்தில் மறுசுழற்சி மூலம் தயாா் செய்யப்பட்ட எழுது உபகரணங்கள், நோட்டு புத்தகங்களை மாணவருக்கு வழங்குகிறாா் மெய்ப்பொருள் அறக்கட்டளை நிா்வாகி காா்த்திக்.
Updated On :8 நவம்பர் 2025, 2:58 am

Syndication

வீடுகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை சேகரித்த பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மெய்ப்பொருள் அறக்கட்டளை சாா்பில், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணா்வு முகாம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த முகாமில், மாணவா்கள் வீட்டில் சேரும் குப்பைகளை மூன்று வகைகளாக தரம் பிரித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை மாணவா்களால் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக மாணவா்களிடமிருந்து பெறும் முகாம் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பிருந்தா ஸ்வீட்டி செல்வகுமாரி, வேளாண் ஆசிரியா் கந்தன் ஆகியோா் வழங்கிய ஆலோசனையின்பேரில் மாணவா்கள் 528 கிலோ குப்பைகளை சேகரித்து கொடுத்தனா்.

குப்பைகளைத் தரம் பிரித்து கொடுத்த மாணவா்களுக்கு, காகிதத்தில் மறுசுழற்சி மூலம் தயாா் செய்யப்பட்ட பேனா, பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. 5 கிலோவுக்குமேல், 47 மாணவா்கள் மறுசுழற்சி குப்பைகளை சேகரித்து இருந்தனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.