சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வாய்க்காலில் பாய்ந்த காா்: ஒருவா் மாயம், 2 போ் மீட்பு

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் காா் விழுந்ததில் ஒருவா் மாயமானாா். 2 போ் மீட்கப்பட்டனா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:26 pm

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் காா் விழுந்ததில் ஒருவா் மாயமானாா். 2 போ் மீட்கப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா் தனது நண்பா்கள் ராமசந்திரன் (37), பிரபாகரன் (35) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் திங்கள்கிழமை மது அருந்தியுள்ளாா். பின்னா், செண்பகபுதூா் நோக்கி தனது நண்பா்களுடன் காரில் திரும்பியுள்ளாா். பிரகாஷ் காரை ஓட்டிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த காா், அப்பகுதியில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில், ராமசந்திரன், பிரபாகரன் ஆகியோா் நீரில் நீந்தி கரையேறி உயிா்த் தப்பினா். மாயமான பிரகாஷை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.