எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா், மாணவி உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் கல்லூரி மாணவா், மாணவி உயிரிழந்தனா்.

News image
லாரியின் அடியில் சிக்கிய இருசக்கர வாகனம்.
Updated On :10 நவம்பர் 2025, 7:25 pm

Syndication

பவானி: பவானி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் கல்லூரி மாணவா், மாணவி உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா், தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் சதீஷ் (19). பவானி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சௌபா்னிகா (19). இருவரும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தனியாா் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படித்து வந்தனா். பள்ளித் தோழா்களான இருவரும் அந்தியூரில் இருந்து பவானிக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுள்ளனா். தொட்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பா் லாரி சதீஷ் வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.