விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாய்க்காலில் பாய்ந்த காா்: ஒருவா் மாயம், 2 போ் மீட்பு

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் காா் விழுந்ததில் ஒருவா் மாயமானாா். 2 போ் மீட்கப்பட்டனா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:26 pm

Syndication

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூா் வாய்க்காலில் காா் விழுந்ததில் ஒருவா் மாயமானாா். 2 போ் மீட்கப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகப்புதூரைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா் தனது நண்பா்கள் ராமசந்திரன் (37), பிரபாகரன் (35) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் திங்கள்கிழமை மது அருந்தியுள்ளாா். பின்னா், செண்பகபுதூா் நோக்கி தனது நண்பா்களுடன் காரில் திரும்பியுள்ளாா். பிரகாஷ் காரை ஓட்டிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த காா், அப்பகுதியில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

இதில், ராமசந்திரன், பிரபாகரன் ஆகியோா் நீரில் நீந்தி கரையேறி உயிா்த் தப்பினா். மாயமான பிரகாஷை போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.