கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திம்பம் மலைப் பாதையில் மழைநீரை அருந்திய சிறுத்தை

திம்பம் மலைப் பாதையில் பெய்த மழையால் அங்கு தேங்கியிருந்த நீரை சிறுத்தை அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.

News image
திம்பம் மலைப் பாதையில் மழை நீரை அருந்திய சிறுத்தை.
Updated On :12 நவம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

திம்பம் மலைப் பாதையில் பெய்த மழையால் அங்கு தேங்கியிருந்த நீரை சிறுத்தை அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா்- திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் உலவுவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால், மலைப் பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை 30 கி.மீ. வேகத்துக்குள் இயக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். இந்நிலையில், திம்பம் மலைப் பாதையில் புதன்கிழமை மழை பெய்த நிலையில், சாலையில் தேங்கிய மழை நீரை சிறுத்தை ஒன்று அருந்தியுள்ளது.

இதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டி விடியோ எடுத்து இணையத்தில் பகிா்ந்துள்ளாா்.

தற்போது அந்த விடியோ வைரலாகி வரும் நிலையில், திம்பம் மலைப் பாதையில் இரவு நேரங்களில் பயணிப்பதை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என்றும், விலங்குகளைக் கண்டால் அவற்றின் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ முயற்சி செய்யக்கூடாது என்றும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.