எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாநில தடகளப் போட்டி: கொங்கு வேளாளா் பள்ளி மாணவிக்கு தங்கம்

மாநில அளவிலான தடகளப் போட்டியில் சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.

News image
மாநில அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவிகளைப் பாராட்டிய கொங்கு வேளாளா் பள்ளியின் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ரங்கசாமி, தாளாளா் எஸ். மணி, பொருளாளா் எ.கே. தங்கமுத்து.
Updated On :12 நவம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

மாநில அளவிலான தடகளப் போட்டியில் சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்றாா்.

மாநில அளவிலான தடகளப் போட்டி தஞ்சாவூா், அன்னை சத்யா மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வட்டு எறிதல் போட்டியில் இப்பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி செளமித்ரா தங்கப் பதக்கமும், 12- ஆம் வகுப்பு மாணவி டி.ஸ்ரீகா வெண்கலப் பதக்கமும் வென்றனா்.

வெற்றிபெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்கள் எம். மனோஜ், வி. பிரியா, எம். கெளசல்யா ஆகியோரையும் பள்ளி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ரங்கசாமி, தாளாளா் எஸ்.மணி, பொருளாளா் எ.கே. தங்கமுத்து, முதல்வா் எஸ். மொ்ஸி பமிலா உள்ளிட்டோா் பாராட்டினா்.