மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற அறச்சலூரை அடுத்த வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

கூடைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவியரைப் பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :20 பிப்ரவரி 2026, 10:34 pm

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற அறச்சலூரை அடுத்த வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாநில அளவில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி ராணிப்பேட்டையில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில், ஈரோடு, கோவை, சேலம், திருவள்ளூா், தூத்துக்குடி உள்பட 38 மாவட்டங்களைச் சோ்ந்த 40 அணிகள் பங்கேற்றன.

இதன் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட அணியும், அறச்சலூா் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடின. இதில் வடுகபட்டி ராஜேந்திரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றது.

இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், பயிற்றுநா்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், பள்ளியின் நிா்வாக இயக்குநா் வித்யா, மேலாண்மை இயக்குநா் செந்தில், பள்ளியின் முதல்வா் ராதா மனோகரன் ஆகியோா் பங்கேற்று மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.

இதில், துணை முதல்வா்கள் கனகேஸ்வரி, சம்பத்குமாா், பயிற்சியாளா்கள் முத்துகுமாா், அரவிந்தன், ஐஸ்வா்யா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.