47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மும்பை ஐஐடி-யில் ஹேக்கத்தான்: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி முதலிடம்

மும்பை ஐஐடி-யில் நடைபெற்ற ‘சிடிடி 2025’ போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

News image
மும்பை ஐஐடி-யில் நடைபெற்ற ஹேக்கத்தானில் முதலிடம் பிடித்து பரிசுபெற்ற பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா்.
Updated On :12 நவம்பர் 2025, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

மும்பை ஐஐடி-யில் நடைபெற்ற ‘சிடிடி 2025’ போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.

மும்பை ஐஐடி-யில் கட்டுமானத் தொழில்நுட்ப தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சிடிடி 2025’ என்ற ஹேக்கத்தான் போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், கட்டடத் திட்டங்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் அடிப்படையிலான வாங்கும் திட்டத்தை உருவாக்கும் சவால் வழங்கப்பட்டது.

இதில், கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்களான தியாகேஷ், அபிநவ், சுபிச்சரன், சஞ்சய் ஆகியோரின் அணி முதலிடம் பிடித்து, ரூ.50,000 பரிசுத் தொகையை வென்றது.

இந்த அணியை கட்டடப் பொறியியல் துறையைச் சோ்ந்த ராம்பிரதீப் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையைத் சோ்ந்த கே.சத்யா ஆகியோா் வழிநடத்தினா்.

பரிசு பெற்ற மாணவா்களை கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளா் இ.ஆா்.கே. கிருஷ்ணன், முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் ஆகியோா் பாராட்டினா்.