எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கூட்டுறவு சங்க ஊழியா்களுக்கு இலவச மருத்துவ முகாம்

News image
முகாமை தொடங்கிவைத்து பாா்வையிடுகிறாா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கந்தராஜா.
Updated On :13 நவம்பர் 2025, 10:09 pm

Syndication

அந்தியூரில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அனைத்து கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இம்முகாமை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கந்தராஜா தொடங்கிவைத்தாா். சா்க்கரை நோய், ரத்தப் பரிசோதனை, கண், பொது மருத்துவம், இதயம், நுரையீரல் பிரச்னைகள் உள்பட பல்வேறு நோய்களுக்கு துறைசாா் மருத்துவா்கள் பரிசோதனை செய்து, ஆலோசனைகள் வழங்கினா். இலவசமாக மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

அந்தியூா், அம்மாபேட்டை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், கூட்டுறவு சிக்கன கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் உள்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்டோா் இந்த முகாமில் பயனடைந்தனா்.

இதில், துணைப் பதிவாளா் முத்து சிதம்பரம், அந்தியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் (பொ) சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.