மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ உள்பட கட்சியினா் மீது வழக்குப் பதிவு

பெருந்துறை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் உள்பட அக்கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 7:35 pm

Syndication

பெருந்துறை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா் உள்பட அக்கட்சியினா் மற்றும் பொதுமக்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறை ஒன்றியம், விஜயமங்கலத்தில், விஜயபுரி அம்மன் கோயில் உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு சொந்தமானது. கோயிலுக்குச் சொந்தமாக 38 ஏக்கா் நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் வெள்ளிக்கிழமை அளவீடு செய்து, கல் நட்டிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில், அதிமுகவினா் மற்றும் கோயிலைச் சோ்ந்த சமூகத்தினா், விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன் என்கிற ராமசாமி, பொன்முடி கிராம ஊராட்சி முன்னாள் தலைவா் தங்கவேல் மற்றும் சிலா் மீது பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.