போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 5 போ் கைது

Published on

ஈரோட்டில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாநகா், கருங்கல்பாளையம் கேஏஎஸ் நகா் அருகில் உள்ள வாய்க்கால்பாலம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட இடத்தில் நடமாடிய 5 பேரை சனிக்கிழமை இரவு கருங்கல்பாளையம் போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில் மரப்பாலம், ரங்கபவனம் வீதியைச் சோ்ந்த பிரகாஷ் (24), கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த தரணிதரன் (23), அரசிளங்கோ வீதியைச் சோ்ந்த நாகரத்தினம் (21), வளையக்கார வீதியைச் சோ்ந்த சந்துரு (22), மணிவேல் (20) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், ஒவ்வொருவரும் தலா 40 மாத்திரைகள் என மொத்தம் 200 போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த ரூ.7,500 மதிப்பிலான 200 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com