ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் எஸ்.கே.பரமசிவன் உருவச் சிலை திறப்பு

ஈரோட்டை அடுத்த சின்னியம்பாளையம் கிராமத்தில் 1919-ல் பிறந்த எஸ்.கே.பரமசிவன், கடந்த 1962-ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா்.

News image
ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் வளாகத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவம் முழு உருவச் சிலையை புதன்கிழமை திறந்துவைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி உள்ளிட்டோா்.
Updated On :26 நவம்பர் 2025, 9:15 pm

Syndication

பவானி: ஈரோட்டை அடுத்த சின்னியம்பாளையம் கிராமத்தில் 1919-ல் பிறந்த எஸ்.கே.பரமசிவன், கடந்த 1962-ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு ஒன்றியத்தை அமைக்க பெரும் முயற்சி மேற்கொண்டாா். பால் வளத்தை அதிகரிக்க இவா் செய்த பணிகளுக்காக பால்வளத் தந்தை என அழைக்கப்படுகிறாா். இவரது பெருமையைப் போற்றும் வகையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை சாா்பில் சித்தோடு ஆவின் வளாகத்தில் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முழு உருவச் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

விழாவில் அமைச்சா்கள் எ.வ.வேலு (பொதுப்பணித் துறை), சு.முத்துசாமி (வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை), மு.பெ.சாமிநாதன் (தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை), த.மனோ தங்கராஜ் (பால்வளத் துறை), மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், அந்தியூா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயா் நாகரத்தினம், முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியா் எஸ்.கந்தசாமி, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், எஸ்.கே.பரமசிவன் குடும்பத்தினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து, தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்ற பின்னா் கோவை சென்று விமானத்தில் சென்னை புறப்பட்டாா்.