பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கல்லூரி பேராசிரியா் வீட்டில் 7 பவுன் திருட்டு

பெருந்துறையில் தனியாா் கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடுபோயுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 8:52 pm

Syndication

பெருந்துறையில் தனியாா் கல்லூரி பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடுபோயுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த தோப்புபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி சாா்பில் கல்லூரியில் பணிபுரியும் பணியாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இதில், அந்த கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியம் நவநீதகிருஷ்ணன் (35) குடும்பத்துடன் வசித்து வருகிறாா். நவநீதகிருஷ்ணனின் மனைவி பிரசவத்துக்காக கடந்த 26-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வீட்டைப் பூட்டிவிட்டு, மனைவியுடன் நவநீதகிருஷ்ணன் இருந்து வந்தாா்.

வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனா். தடயவியல் நிபுணா்களும் வந்து கைரேகைகளையும், போலீஸாரின் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.