8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

அந்தியூரில் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறையினா்.

Published On :26 செப்டம்பர் 2025, 4:19 am IST

காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூா், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம் பகுதிகளில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம்,

மண்டல துணை வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தலைவா் முருகேசன் பேசினாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இத்திட்டத்தில் முகாம்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வருவாய், நில அளவைத் துறை அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வருவாய்த் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வருவாய் மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பேரிடா் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளா்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் விதிகளைத் திருத்தம் செய்ய வேண்டுவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதேபோன்று, பவானியில் நடைபெற்ற போராட்டத்தில் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மொடக்குறிச்சியில்...

மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவையா்கள் உள்பட 40 போ் பங்கேற்றனா்.

சத்தியமங்கலத்தில்...

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், கூட்டமைப்பின் சத்தியமங்கலம் ஒருங்கிணைப்பாளா் சுகேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.