/
பெருந்துறை சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா், பெருந்துறை கடை வீதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பெருந்துறை நகரில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினாா்.
பெருந்துறை கடை வீதி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் அதிமுக தோ்தல் அறிக்கையை விளக்கி வாக்கு சேகரித்தாா்.
பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி. பொன்னுதுரை, ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித் ராஜ், விஜயன், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளா் அருணாசலம் மற்றும் கூட்டணி கட்சியினா் உடன் சென்றனா்.
தொடர்புடையது

பெருந்துறையில் 2-ஆவது முறையாக வாகைசூடிய அதிமுக வேட்பாளா்

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்கள் உள் இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயா்த்தப்படும்: பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா்

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு







