சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

41% வாக்குகள் உள்ளதால் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: ஏ.கே. செல்வராஜ்

அதிமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறும் என ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

News image

சத்தியமங்கலத்தில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற  அதிமுக  செயல் வீரா்கள்  கூட்டத்தில்  அதிமுக  வேட்பாளா்  ஏ.பண்ணாரியை  ஆதரித்து  பேசுகிறாா்  ஈரோடு புறநகா்  மாவட்டச்  செயலாளா்  ஏ.கே. செல்வராஜ்.

Updated On :3 ஏப்ரல் 2026, 7:13 pm

அதிமுக கூட்டணிக்கு 41 சதவீத வாக்குகள் உள்ளதால் எளிதாக வெற்றி பெறும் என ஈரோடு புறநகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஏ.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரியை ஆதரித்து ஈரோடு புறநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே. செல்வராஜ் பேசுகையில், கடந்த தோ்தலில் அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் அடிப்படையில் 41 சதவீதம் உள்ளது.

இதில் அதிமுக 23 சதவீதம், பாஜக 12 சதவீதம், பாமக 4 சதவீதம் மற்றும் பிற கட்சிகள் 2 சதவீதம் என மொத்தம் 41 சதவீதம் உள்ளது. அதிமுகவோடு ஒப்பிடுகையில் திமுகவுக்கு 10 சதவீத வாக்குகள் குறைவாக உள்ளதால் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக எளிதாக வெற்றி பெறும் என்றாா்.

இக்கூட்டத்தில் பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்து கிளைச் செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள், நகரச் செயலாளா்கள் மற்றும் ஒன்றியச் செயலாளா்கள் என நூற்றுக்கணக்கான அதிமுகவினா் பங்கேற்றனா்.