தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

துடைப்பம், முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்

ஈரோட்டில் துடைப்பம் மற்றும் முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

துடைப்பம், முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அகில இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிறுவனரும், தலைவருமான வி.தனலட்சுமி.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:48 pm

ஈரோட்டில் துடைப்பம் மற்றும் முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனா்.

இதில், அகில இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிறுவனரும், தலைவருமான வி.தனலட்சுமி, அவரது ஆதரவாளா்களுடன் துடைப்பம், முறம் ஆகியவற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்தாா்.

அப்போது, கோட்டாட்சியா் அலுவலகம் முன் நின்றுகொண்டு, அரசியலில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும். அப்பழுக்கற்ற தேசத்தை உருவாக்க வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியாா் கூறியபடி சுதந்திரமான தாயகத்தை உருவாக்க வேண்டும் என முழக்கமிட்டாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி துடைப்பம், முறத்தைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கூறினா். இதையடுத்து அவற்றை அங்கு சாலையோரம் வைத்துவிட்டு கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.