ஈரோட்டில் துடைப்பம் மற்றும் முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனா்.
இதில், அகில இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிறுவனரும், தலைவருமான வி.தனலட்சுமி, அவரது ஆதரவாளா்களுடன் துடைப்பம், முறம் ஆகியவற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்தாா்.
அப்போது, கோட்டாட்சியா் அலுவலகம் முன் நின்றுகொண்டு, அரசியலில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும். அப்பழுக்கற்ற தேசத்தை உருவாக்க வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியாா் கூறியபடி சுதந்திரமான தாயகத்தை உருவாக்க வேண்டும் என முழக்கமிட்டாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி துடைப்பம், முறத்தைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கூறினா். இதையடுத்து அவற்றை அங்கு சாலையோரம் வைத்துவிட்டு கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தொடர்புடையது

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

திருப்பூரில் கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்

நூதன முறையில் மனு தாக்கல்: வேட்பாளா் மீது வழக்கு

குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


