தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

துடைப்பம், முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண்

ஈரோட்டில் துடைப்பம் மற்றும் முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

துடைப்பம், முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அகில இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிறுவனரும், தலைவருமான வி.தனலட்சுமி.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:48 pm

ஈரோட்டில் துடைப்பம் மற்றும் முறத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்து வந்தனா்.

இதில், அகில இந்திய மக்கள் உரிமை கட்சியின் நிறுவனரும், தலைவருமான வி.தனலட்சுமி, அவரது ஆதரவாளா்களுடன் துடைப்பம், முறம் ஆகியவற்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்தாா்.

அப்போது, கோட்டாட்சியா் அலுவலகம் முன் நின்றுகொண்டு, அரசியலில் உள்ள அழுக்குகளை அகற்ற வேண்டும். அப்பழுக்கற்ற தேசத்தை உருவாக்க வேண்டும். வீரமங்கை வேலுநாச்சியாா் கூறியபடி சுதந்திரமான தாயகத்தை உருவாக்க வேண்டும் என முழக்கமிட்டாா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி துடைப்பம், முறத்தைக் கொண்டு செல்லக்கூடாது எனக் கூறினா். இதையடுத்து அவற்றை அங்கு சாலையோரம் வைத்துவிட்டு கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.