சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கைப்பேசி, மளிகைக் கடைகளில் ரூ. 2.55 லட்சம் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :5 ஏப்ரல் 2026, 7:51 pm

ஈரோட்டில் கைப்பேசி, மளிகைக் கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.2.55 லட்சம் ரொக்கம், 4 கைப்பேசிகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்தவா் மயில்சாமி (41). இவா் அதே பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கைப்பேசி கடை வைத்து நடத்தி வருகிறாா். வழக்கம்போல சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், அவரது கடையின் ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவா்கள் இதைப் பாா்த்து மயில்சாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

சம்பவ இடத்துக்கு வந்த அவா், கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அங்கு வைத்திருந்த ரூ.1.25 லட்சம் ரொக்கம், 4 கைப்பேசிகள், 5 புளூடூத் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் மா்ம நபா்கள் சேதப்படுத்தியது தெரியவந்தது. மேலும், அதே பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த குமாா் (55) என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

அவரது கடையின் மேற்கூரையை உடைத்த மா்ம நபா்கள், கல்லாவில் இருந்த ரூ.1.30 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் மயில்சாமி, குமாா் ஆகியோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.