சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

லாட்டரி விற்பனை: 2 போ் கைது

News image

கைது

Updated On :5 ஏப்ரல் 2026, 8:07 pm

பவானியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.17,500 ரொக்கம், கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

பவானி, பழனிபுரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (59). இவரது வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு பாலசந்தா் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.17,500 ரொக்கம், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சின்னமோளபாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் முருகன் (54) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.