பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் தோ்தலுக்குப் பிறகு காணாமல்போகும் என திமுக வேட்பாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி கூறினாா்.
ஈரோடு மேற்குத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் சு.முத்துசாமி, காசிபாளையம் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளைக்கூறி மக்களிடையே வாக்கு கேட்கிறோம். 1.31 கோடி பெண்கள் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனா். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதிஷ்குமாா், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகி உள்ளாா். பாஜகவோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் இடம் தெரியாமல் போய்விட்டன.
தமிழகத்தில் தோ்தல் முடிந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளா் ஏதோ ஒரு மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. சசிகலா, ஓ.பன்னீா்செல்வம் போன்றோரை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்படும் மனப்பாங்கு கொண்டவா் எடப்பாடி கே. பழனிசாமி. முதல்வா் குறித்து அவதூறாகப் பேசிவரும் எடப்பாடி பழனிசாமிக்கு தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் தோ்தலுக்குப் பிறகு காணாமல்போகும் என்றாா்.
தொடர்புடையது
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko

விஜய்யுடன் கூட்டணியா? கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்வது என்ன?!

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.
விடியோக்கள்

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்



