ஈரோட்டில் கைப்பேசி மற்றும் மளிகைக் கடைகளில் மேற்கூரையை உடைத்து திருடிய வழக்கில் ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு, மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே மயில்சாமி (41) என்பவா் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் கடந்த 5-ஆம் தேதி காலை கடையைத் திறக்க வந்துள்ளாா். அப்போது, கடையின் மேற்கூரை உடைந்து கிடந்துள்ளது. மேலும், அங்கிருந்த பணம் திருடுபோனது தெரியவந்தது. அதே பகுதியில், குமாா் என்பவருக்குச் சொந்தமான மளிகைக் கடையின் மேற்கூரையை உடைத்தும் திருட்டு நடைபெற்றுள்ளது.
இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இரண்டு கடைகளிலும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், சித்தூா் கைனிக்கரை பகுதியைச் சோ்ந்த ஹேமந்த் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹேமந்த்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
கைப்பேசி கடையில் திருடிய 2 போ் கைது
கைப்பேசி, மளிகைக் கடைகளில் ரூ. 2.55 லட்சம் திருட்டு

மது போதையில் ரகளை: இளைஞா் கைது
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

