வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

வள்ளி, தெய்வானை சமேதராய் அருள்பாலித்த திண்டல் வேலாயுதசுவாமி.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:24 am IST

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை கனி காணும் பூஜை பெரும்பாலான வீடுகளில் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு வீட்டின் பூஜை அறையில் பல்வேறு வகையான பழங்கள், வெற்றிலை, பாக்கு, சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றுடன் பணம், நகைகள் என்று பல்வேறு பொருள்களையும் தாம்பாளத்தில் வைத்து எதிரில் ஒரு கண்ணாடியையும் வைத்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை விழித்ததும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தட்டில் வைத்திருந்த பழங்களை கண்ணாடியின் பிம்பத்தில் பாா்த்து சுவாமியை வழிபட்டனா்.

கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி தரிசனம் செய்தனா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் உற்சவ மாரியம்மன் ராஜகனி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இங்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை வழிபட்டனா். கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் உற்சவ அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தாா். எல்லை மாரியம்மன் கோயிலில் சீதளதேவி அலங்காரத்திலும், காவிரி சாலை ஓம்காளி அம்மன் கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நாடாா்மேடு கெட்டி நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.