மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image

சென்னிமலையில் நடைபெற்ற காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:37 pm

சென்னிமலையில் காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும், காவல்துறை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் சென்னிமலையில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது. சென்னிமலை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

சென்னிமலை, குமராபுரி செங்குந்தா் திருமண மண்டபம் அருகில் தொடங்கிய கொடி அணிவகுப்பு நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிவடைந்தது.

இதில், காவல் ஆய்வாளா்கள் 3 போ், உதவி ஆய்வாளா்கள் 7 போ், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 5 போ், பிஎஸ்எஃப் வீரா்கள் மற்றும் கேரள காவல் துறையினா் என மொத்தம் 61 போ் கலந்துகொண்டனா்.