திமுக ஆட்சி அமைந்ததும் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்கப்படும் என்று மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் சா.செந்தில்நாதன் தெரிவித்தாா்.
மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அவல்பூந்துறை, அரச்சலூா் பேரூராட்சிக்குள்பட்ட குப்பகவுண்டன்வலசு, பொன்காளி வலசு, எறப்பம்பாளையம், காருத்துபாளையம், பூவாண்டிவலசு, மின்னக்காட்டுவலசு, பாரதி நகா், திருமங்கலம், ராசாம்பாளையம், மந்திரிபாளையம் உள்பட 45-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சியின் சாதனைகள், தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
திமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மொடக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சு.குணசேகரன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரா.விஜயகுமாா், அவல்பூந்துறை பேரூராட்சி செயலாளா் சாமியப்பன் (எ) சண்முகசுந்தரம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்

கூட்டணி கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு.

சிறுபான்மையினா் தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயா்த்தப்படும்!

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


