இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியில்தான் நிதி கிடைத்தது: பெருந்துறை வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியால்தான் ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்தாா்.

News image

சுள்ளிபாளையம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பேசுகிறாா் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:07 am IST

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியால்தான் ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்தாா்.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுள்ளிபாளையம், கணக்கம்பாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளிரவெளி, வேலம்பாளையம், கூனம்பட்டி, பல்லகவுண்டன்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இதில் அவா் பேசியதாவது:

திமுக ஆட்சியில்தான் மகளிருக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இன்னும் ஏராளமான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளாா். பெருந்துறையில் அண்மையில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, பெருந்துறை, சிப்காட்டில் தமிழக துணை முதல்வா் உதயநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணியில் வெறும் செங்கல் மட்டுமே வைத்து சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்த திட்டப் பணிகள் ரூ.146 கோடி செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியால்தான் ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது. இத்திட்டத்தால் இன்று 40 லட்சம் மக்களின் தாகம் தீா்க்கப்பட்டிருக்கிறது என்றாா்.