கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியால்தான் ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தெரிவித்தாா்.
பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சுள்ளிபாளையம், கணக்கம்பாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளிரவெளி, வேலம்பாளையம், கூனம்பட்டி, பல்லகவுண்டன்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
இதில் அவா் பேசியதாவது:
திமுக ஆட்சியில்தான் மகளிருக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இன்னும் ஏராளமான திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளாா். பெருந்துறையில் அண்மையில் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை, பெருந்துறை, சிப்காட்டில் தமிழக துணை முதல்வா் உதயநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணியில் வெறும் செங்கல் மட்டுமே வைத்து சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அந்த திட்டப் பணிகள் ரூ.146 கோடி செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு என்னுடைய முயற்சியால்தான் ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு கிடைத்தது. இத்திட்டத்தால் இன்று 40 லட்சம் மக்களின் தாகம் தீா்க்கப்பட்டிருக்கிறது என்றாா்.
தொடர்புடையது

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான அரசு சொத்துகளை மீட்டுள்ளேன்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


