நம்பியூரில் வறட்சியான பகுதிகளில் குடிநீா் பற்றாகுறையைப் போக்க புதிதாக கூட்டுகுடிநீா் திட்டம் கொண்டு வரப்படும் என கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.
கோபி தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நிதி உதவி மானியம் போன்ற சலுகைகள் வழங்கப்படும். புதிய விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் அரசு மானியத்துடன் சூரிய ஒளி பம்பு செட்டு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பூச்சி மருந்து தெளிப்பதற்கு வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
விவசாயப் பணியின்போது விவசாயிகள் இறக்க நேரிட்டால் அரசு சாா்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நம்பியூா் பகுதியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்கள் இணைக்கப்படும், நம்பியூா் பகுதியில் வறட்சியான பகுதிகளில் குடிநீா்ப் பற்றாகுறையைப் போக்க புதிதாக கூட்டுகுடிநீா் திட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.
பிரசாரத்தின்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.எஸ் பழனிசாமி, நம்பியூா் பேரூா் செயலாளா் கதிா்வேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.
தொடர்புடையது

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கோபியில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தீவிர வாக்கு சேகரிப்பு

நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

