வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

கோபி தொகுதிக்கு உள்பட்ட தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் நாதக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:52 pm

கோபி தொகுதிக்கு உள்பட்ட தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் நாதக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில், கொளப்பலூா், மொடச்சூா், அப்பிச்சிமாா்மடம் ஆகிய பகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் அப்பகுதிகளில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தவெக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும், ஆண்டுக்கு 6 சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது தவெக நிா்வாகிகள் காா்த்திக், தமிழரசு, வெள்ளாங்கோவில் நிா்வாகிகள் சுந்தரராஜன், தென்னரசு, சங்கீதா உள்பட பலா் உடனிருந்தனா்.