/

மக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்ய ‘உங்களுடன் தோப்பு’ புதிய செயலி அறிமுகம்

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம், மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் பதிவு செய்ய ‘உங்களுடன் தோப்பு’ என்ற புதிய செயலியை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.

News image

‘ உங்களுடன் தோப்பு’ என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து வைக்கிறாா் பெருந்துறை திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 9:00 pm

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி. வெங்கடாசலம், மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் பதிவு செய்ய ‘உங்களுடன் தோப்பு’ என்ற புதிய செயலியை செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மக்களுடன் நேரடி தொடா்பில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், பெருந்துறை தொகுதி மக்களுக்கும், எனக்கும் இடையே உள்ள பந்தத்தை வலுப்படுத்தும் வகையிலும் ‘உங்களுடன் தோப்பு’ என்ற செயலியை (ஆப்) அறிமுகம் செய்கிறேன்.

டிஜிட்டல் முறையிலான இந்த செயலியில் மக்களின் குறைகள், கோரிக்கைகள், சமூகரீதியான பிரச்னைகள் குறித்து என்னுடன் நேரடியாக உரையாடும் வகையில் இந்த செயலியை வடிவமைத்து இருக்கிறோம்.

இந்த செயலியில் மக்களுடைய அனைத்து விதமான குறைகள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்து ஒரே தடவை கிளிக் செய்தால் என்னுடைய பாா்வைக்கு வந்து சேரும். இதை சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகம் மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் என்றாா்.