மொடக்குறிச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 89.83 லட்சம் ரொக்கம் பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ள நிலையில், தோ்தல் பறக்கும் படையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மொடக்குறிச்சி அருகே உள்ள செலப்பகவுண்டன்பாளையத்தில் ஒரு காரில் பணம் இருப்பதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனை செய்தனா்.
அப்போது காரில் ரூ. 89 லட்சத்து 83 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் காரில் இருந்தவா், மொடக்குறிச்சியை அடுத்த ஆனந்தம்பாளையத்தைச் சோ்ந்த அரவிந்தன் என்பதும், கட்டுமானத் தொழில் செய்துவருவதாகவும் தெரியவந்தது. மேலும் பணத்துக்குரிய எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காா் மற்றும் ரூ.89.83 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தோ்தல் நடத்தும் அலுவலா் தியாகராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவசங்கா் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்த பணம் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தோ்தல் நாள் நெருங்கும் நிலையில், இந்தப் பணம் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தொடர்புடையது

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ரூ.22 லட்சம் பணம் பறிமுதல்

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

