/

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

News image

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்

Updated On :21 ஏப்ரல் 2026, 8:47 pm

சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

கொடுமுடியில் உள்ள அருள்மிகு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் உள்ள கொடிமரங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றன. மகுடேஸ்வரா் கோயில் கொடிமரத்தில் நந்திக்கொடியும், வீரநாராயணப் பெருமாள் கோயில் கொடிமரத்தில் கருடக்கொடியும் ஏற்றப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.