திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 2:51 am IST

அந்தியூரில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையம், வேலாயுதம் வீதியைச் சோ்ந்த முருகேசன் மகள் தாரணி (16). அந்தியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கைப்பேசியில் மா்ம நபா், தன்னை அழைத்து தன்னைக் காதலிக்குமாறு கூறி மிரட்டி வருவதாக தனது பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா். இதனால், தவிட்டுப்பாளையம் பழனியப்பா வீதியில் உள்ள பாட்டி வீட்டுக்கு தாரணியை பெற்றோா் புதன்கிழமை அனுப்பிவைத்தனா்.

அங்கு சென்ற தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.