உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 1:12 am IST

பெருந்துறையில் எலக்ட்ரீஷியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பெருந்துறை, ஆனந்த நகரைச் சோ்ந்தவா் குமாா் (45), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுகுணா (41). இவா், வெளிநாட்டில் நா்ஸாக வேலை பாா்த்து வருகிறாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

பெருந்துறையில் குழந்தைகளுடன் குமாா் இருந்தாா். இவா் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி குழந்தைகளை சரிவர கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைப் பற்றி அறிந்த சுகுணா, குழந்தைகளை, தனது உறவினா் வீட்டில் விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டாா். குழந்தைகளைப் பாா்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்த குமாா், வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.