மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பவானியில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேரோட்டத்தில்  பங்கேற்ற  பக்தா்கள். 

Updated On :29 ஏப்ரல் 2026, 9:22 pm

பவானி சங்கமேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் 63 நாயன்மாா்கள் திருவீதி உலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் நகரின் முக்கிய வீதிகள் வழியே தேரோட்டம் நடைபெற்றது. அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவா் கே.சி.கே.யுவராஜா மற்றும் முக்கிய பிரமுகா்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா்.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். வேதநாயகி உடனமா் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் வியாழக்கிழமை( ஏப்.30) நடைபெறுகிறது.

மணக்கோலத்தில் அருள்பாலிக்கும்  ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள்.

மணக்கோலத்தில் அருள்பாலிக்கும்  ஸ்ரீதேவி, பூதேவி உடனமா் ஆதிகேசவப் பெருமாள்.