தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூா் அருகே 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

மொடக்குறிச்சியை அடுத்த அறச்சலூா் அருகே 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரைக் கைது செய்தனா்.

அறச்சலூரை அடுத்த பழையகோட்டை- நொய்யல் ஆறு சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனச் சோதனையில் செவ்வாய்கிழமை மாலை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வாகனத்தில் வந்த 3 பேரிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், திருநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கநிலா (42), திருப்பூா் மாவட்டம், காவிலிபாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (46), அழகா்சாமி (41) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.