பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனம் சிறப்பு நனைப்புக்கு 15 நாள்கள் தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டதையடுத்து, முதற்கட்டமாக சனிக்கிழமை 500 கனஅடிநீா் திறந்துவிடப்பட்டது.
பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் 58 அடியாக சரிந்துள்ளது. போதிய நீா் இருப்பு இல்லாத நிலையில் பாசனத்துக்கு இந்தாண்டு தண்ணீா் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக கால்நடை குடிநீா் தேவைக்கு 15 நாள்களுக்கு உயிா் தண்ணீா் திறக்குமாறு பாசனப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் தொடா் நடவடிக்கையால் பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் சிறப்பு நனைப்புக்கு முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தண்ணீா் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேள்விக்குறியாகும் கீழ்பவானி பாசன தண்ணீா் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி நீா் திறப்பு

ஆடிப்பெருக்கு: கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீா் திறப்பு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



