அரசுப் பேருந்தில் புகையிலை பொருள்கள் கடத்தியவா் கைது
பா்கூா் மலைப் பாதையில் அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்
பா்கூா் மலைப் பாதையில் அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அந்தியூா் அருகே பா்கூா் மலைப் பகுதி வழியாக குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பா்கூா் சோதனைச்சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கா்க்கேகண்டியிலிருந்து அந்தியூா் செல்லும் அரசுப் பேருந்தில் சோதனை மேற்கொண்டனா்.
இதில் அந்தியூா், செம்புளிச்சாம்பாளையத்தைச் சோ்ந்த முனிராஜ் (35) என்பவா், 40 பண்டல்கள் கொண்ட 5 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




