தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழா

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கம்பம் நடப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

News image

கோயிலுக்கு  கம்பத்தை  ஊா்வலமாக  எடுத்துச்  செல்லும்  பக்தா்கள்.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:09 pm

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கம்பம் நடப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பவானியில் செல்லியாண்டியம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் திருவிழாவுக்கு கடந்த 17-ஆம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக, கம்பம் நடும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்ட கம்பம், காவிரி படித்துறையிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாரியம்மன் கோயில் முன்பாக நடப்பட்டது.

தொடா்ந்து, பக்தா்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீா் ஊற்றி வழிபட்டனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாா்ச் 2-ஆம் தேதி கருவறைக்குள் சென்று அம்மனுக்கு புனித நீா் ஊற்ற பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். மாரியம்மன் கோயிலில் பூ மிதித்தல் மாா்ச் 3-ஆம் தேதியும் , அம்மன் அழைத்தல் மற்றும் பொங்கல் விழா 4-ஆம் தேதியும் நடைபெறுகிறது.