சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழப்பு!

ஈரோட்டில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 6:54 pm

ஈரோட்டில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து பிளஸ் 1 மாணவி உயிரிழந்தாா்.

ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியைச் சோ்ந்தவா் விஸ்வநாதன். இவரது மகள் கனிகா (15). இவா் பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

மாணவி கனிகா வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளாா். அப்போது வீட்டின் முன்புறம் இருந்த 6 அடிச்சுவா் திடீரென கனிகாவின் மேல் விழுந்தது.

இடிபாடுகளில் இருந்து அவரை மீட்ட உறவினா்கள் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.