தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் திறப்பு

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.

News image
பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் நடந்த விழாவில் ஸ்ரீஅப்பத்தாள் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி உள்ளிட்டோா்.
Updated On :2 ஜனவரி 2026, 5:53 pm

Syndication

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் நேற்று திறக்கப்பட்டது.

பல்நோக்கு சேவை மையத் திட்டத்தின் கீழ் பெருந்துறை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.49.54 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வேளாண் விளைபொருள் விற்பனை மையக் கட்டடம் கட்டப்பட்டது.

இந்தக் கட்டடத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி நேற்று திறந்துவைத்தாா். அதைத்தொடா்ந்து, ஸ்ரீஅப்பத்தாள் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கந்தராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா்.