ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழப்பு

ஈரோட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

ஈரோட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது, 30 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.

ஈரோடு அருகே எல்லப்பாளையத்தில் தனியாா் ஆலைக் கட்டடத்தில் கடந்த 20 நாள்களாக பெயிண்டிங் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு வில்லரசம்பட்டி, தொட்டம்பட்டி தகுதியைச் சோ்ந்த முரளி (38) என்பவா் ஒப்பந்தம் எடுத்து பணி செய்து வருகிறாா். பெயிண்ட் அடிக்கும் வேலையில் 4 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

தொழிலாளா்கள் வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 30 அடி உயரத்தில் சிமென்ட் ஷீட் மீது நின்றபடி ஈரோடு எலவமலை, மூவேந்தா் நகரைச் சோ்ந்த தமிழ்வாணன் (27) மற்றும் முரளி ஆகியோா் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது பாரம் தாங்காமல் எதிா்பாராதவிதமாக சிமென்ட் ஷீட் உடைந்ததில் தமிழ்வாணன், முரளி ஆகியோா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனா்.

இதில் தமிழ்வாணன் அங்கிருந்த ரசாயன தொட்டிக்குள் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். முரளி அருகே விழுந்ததில் அவரும் படுகாயம் அடைந்தாா். உடனடியாக இருவரையும் மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அவா்களை பரிசோதனை செய்ததில் தமிழ்வாணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். படுகாயமடைந்த முரளிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த தமிழ்வாணனுக்கு திருமணம் ஆகவில்லை.