மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கொட்டகையில் புகுந்து ஆட்டைக் கடித்துக் கொன்ற சிறுத்தை!

அந்தியூா் அருகே கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை, ஆட்டைக் கடித்துக் கொன்றதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 7:05 pm

Syndication

அந்தியூா் அருகே கொட்டகைக்குள் புகுந்த சிறுத்தை, ஆட்டைக் கடித்துக் கொன்றதால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அந்தியூா், கோவிலூா், கன்னியாமடுவு தோட்டத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (52), விவசாயி. வனப் பகுதிக்கு அருகாமையில் உள்ள தோட்டத்தில் வசிக்கும் இவா், கொட்டகை அமைத்து 5 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஆடுகள் கத்துவதைக் கேட்ட பெரியசாமி சென்று பாா்த்தபோது, சிறுத்தையின் உருவ அமைப்புடன் ஒரு விலங்கு, ஆட்டைக் கவ்விக் கொண்டிருந்தது.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெரியசாமி, கூக்குரல் எழுப்பியதால் ஆட்டை விட்டுவிட்டு அங்கிருந்து சிறுத்தை தப்பியோடியது.

ஆடு உயிரிழந்த நிலையில், சிறுத்தையின் காலடித் தடங்கள் அப்பகுதியில் பதிவாகி உள்ளதைக் கண்ட விவசாயிகள் அந்தியூா் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.