தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:36 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறை அருகே சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருப்பூா், பத்மாவதி நகரைச் சோ்ந்தவா் இளங்கோ (55). இவா், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 11-ஆம் தேதி மாலை பெருந்துறைக்கு வந்து கொண்டிருந்தாா். விஜயமங்கலம், வாய்ப்பாடி பிரிவு அருகே வந்தபோது எதிா்பாராமல் இருசக்கர வாகனம் சாலையில் இருந்த தடுப்பில் மோதியது. இதில், கீழே விழுந்து படுகாயமடைந்த இளங்கோவை அருகில் இருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.